மியூசிக் ஆல்பத்திற்கான வீடியோ சூட்டின் போது துப்பாக்கி முனையில் 8 மாடல் அழகிகள் பாலியல் பலாத்காரம்

ஜோகன்ஸ்பர்க்

தென்னாப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க்கிற்கு மேற்கே உள்ள சிறிய நகரமான க்ரூகர்ஸ்டோர்ப்பின் புறநகர் பகுதியில்

மியூசிக் ஆல்பம் ஒன்றுக்கான வீடியோ ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. இதில் 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண் மாடல்களும் பல ஆண்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இந்த ஷூட்டிங் போது துப்பாக்கிய ஏந்திய ஒரு கும்பல் உள்ளே புகுந்து அந்த ஷூட்டிங்கில் உள்ள பெண் மாடல்களை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.

மேலும், வீடியோ ஷூட்டிங்கில் ஈடுபட்ட குழுவினரை சரமாரியாகத் தாக்கிய அந்த கும்பல் குழுவினரின் உபகரணங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். அங்கிருந்த ஆண்களை நிர்வாணப்படுத்தித் தாக்கிய கும்பல், அனைவரின் பணத்தையும் பொருள்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தென்னாப்பிரிக்காவில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் சிரில் ரமபோசா, குற்றவாளிகளை விரைந்து பிடித்து தண்டனை வழங்க வேண்டும் என அந்நாட்டின் காவல்துறை உத்தரவிட்டுள்ளார்.

தாக்குதல் தொடர்பாக இதுவரை சுமார் 20 சந்தேக நபர்களில் மூவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை அமைச்சர் பெக்கி செலே தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது பெண்கள் 18 மற்றும் 35 வயதிற்குட்பட்டவர்கள், ஒரு பெண் 10 ஆண்களாலும் மற்றொரு பெண் 8 பேராலும் கற்பழிக்கப்பட்டதாக செலே கூறினார்.

முதல்கட்ட விசாரணையில் கிடைத்த தகவலின் படி, குற்றத்தில் ஈடுபட்ட கும்பல் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்கள் தென்னாப்பிரிக்காவின் கனிம சுரங்கங்களில் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் பாலியல் குற்றங்கள் அதிகம் காணப்படுவதாகவும், சராசரியாக 12 நிமிடத்திற்கு ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாவதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.