வருட இறுதி வரை நாட்டில் எரிவாயுக்கு தட்டுப்பாடு இருக்காது

இந்த வருட இறுதி வரை நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட மாட்டாது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதாவது, அடுத்த வருடத்திற்கான புதிய வழங்குனர் ஒருவர்(supplier) தெரிவாகியுள்ளார்.எனவே அடுத்த 16 மாதங்களுக்கு எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்று அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் கவனம் செலுத்தி, மக்கள் எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.