ஜனாதிபதி ரணில் மீது சுமந்திரன் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு



நாடாளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் தனக்கு வாக்களித்ததாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து பொய்யானதென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி பொய் சொல்கிறார். டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏகமனதாகத் தீர்மானித்தது.

ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாங்கள் யாரும் கூறவில்லை என அவர் தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்தபோது இந்த விடயத்தையும் இதேபோன்ற பல விடயங்களையும் நாங்கள் வெளிப்படுத்தினோம். இதனை நிறுத்துமாறு கூறினோம். அவரும் ஏற்றுக் கொண்டார்.

அவர் கொடுத்த வார்த்தையை காப்பாற்றுகிறாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.