நிதிஷ் குமாரின் ராஜினாமா முடிவு சிறப்பானது..! – அகிலேஷ் யாதவ் திடீர் பாராட்டு..!

பீகார் முதல்வர் பதவியிலிருந்து நிதிஷ் குமார் ராஜினாமா செய்திருப்பது சிறப்பான முடிவு என சமாஜ் வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். உத்திர பிரதேசத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் “இன்னும் பல மாநில கட்சிகளும் மக்களும் பாஜகவுக்கு எதிராக வெகுண்டு எழுவார்கள்” என்று கருது தெரிவித்து உள்ளார் அகிலேஷ் யாதவ்.

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்திலும் நிதிஷ் கலந்து கொள்ளவில்லை. ஆனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார் . இந்நிலையில் பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதாக முதல்வர் நிதிஷ்குமார் தமது கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அறிவித்தார். இதனையடுத்து பாஜக- ஜேடியூ கூட்டணியின் 2 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக நிதிஷ் குமார் தனது பீகார் மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். பீகார் ஆளுனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். அனைத்து சட்ட மன்ற உறுபினர்களும் நாடாளுமன்ற உறுபினர்களும் பாஜக மீதுள்ள அதிருப்தியில் ராஜினாமா செய்ய உள்ளார்கள் என்றும் கூறினார்.

ராஜினாமா செய்த பின் நிதிஷ் குமார் ராப்ரி தேவி குடியிருப்பு பகுதியில் அமைந்து இருக்கும் பாட்னாவிற்கு வந்து அடைந்தார். அதற்கு முன்னதாக தனது கட்சி மூத்த தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பிறகு ஆளுனரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்திருப்பது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.