கேரளாவில் விற்பதற்காக கடத்திச்செல்லப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரான ஆம்பர் கிரீஸ் பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் கேரளாவில் விற்பதற்காக கடத்திச்செல்லப்பட்ட 12 கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கல உமிழ்நீரான ஆம்பர் கிரீஸை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் வலையில் சிக்கிய ஆம்பர் கிரீஸை மீனவர்கள் சிலர் விற்பனைக்கு முயற்சி செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. குளச்சல் பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரில் வந்த 5 பேரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர்கள் காரில் ஆம்பர் கிரீஸை கடத்தி கேரளாவிற்கு விற்பனை செய்ய கொண்டு செல்வது தெரியவந்தது.

இதனையடுத்து 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 12 கிலோ ஆம்பர் கிரீசை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் இருந்த கார், 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். 

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.