நாட்டில் விடுதலைக்கு உயிர் தியாகம் செய்தவர்கள் பங்கு அதிகம்: மண்டியா நகரசபை தலைவர் மஞ்சுநாத் பேட்டி

மண்டியா:

மண்டியா டவுன் பகுதியில் உள்ள கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ் நிலையத்தில் செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை சார்பில் நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் விடுதலை போராட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியின்போது பேசிய நகரசபை தலைவர் மஞ்சுநாத் கூறியதாவது:-

இந்தியாவின் விடுதலைக்கு பலர் தங்கள் உயிர்களை தியாகம் செய்துள்ளனர். விடுதலையில் அவர்களின் பங்கு அதிகமாகும். இது அனைவர் மனதிலும் மிகவும் வலியை ஏற்படுத்தியது. வாகன வசதி இல்லாத காலத்தில் இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்கும், அங்கிருந்து இந்தியாவிற்கும் பலர் வந்தனர். அந்த காட்சிகள் தத்துரூபமாக புகைப்படம் எடுக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.