இலவச திட்டங்களுக்கு தடை கோரி வழக்கு..! – என்ன சொல்கிறது உச்ச நீதி மன்றம்..?

உச்சநீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த இலவச திட்டங்களுக்கு எதிரான மனுவில், அரசியல் கட்சிகள் இலவசங்களை தேர்தல் வாக்குறுதிகளாக வழங்க கூடாது என்றும், அப்படி வழங்கினால் தேர்தல் ஆணையம் அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அந்த கட்சிக்கான அங்கீகாரத்தை ரத்து செய்யஉத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அதேநேரம், ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.கடந்த சில ஆண்டுகளாகவே நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்து வந்த நிலையில், இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயக விரோத செயல் என்றும், ஜனநாயக விரோத செயல் என்பதால் அதனை பரிசீலிக்க மாட்டோம் என்றும் தெரிவித்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி முன்பாக விசாரணைக்கு வந்தபோது, திராவிட முன்னேற்ற கழகம் சார்பில்வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வில்சன் ஆஜராகி இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.மேலும்இந்தியா என்பது சோசியலிச நாடு என்றும், இதனை மத்திய அரசு முதலாளித்துவ நாடாக மாற்ற முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.ரிட் மனுவின் நோக்கமானது மாநில கொள்கைகளின் வழிகாட்டு நெறிமுறைகளை தடுப்பதாக உள்ளதாக குறிப்பிட்டார்.பின்னர்மத்திய அரசு சார்பில், நாங்கள்அத்தனை சமூக நலத்திட்டங்களையும் எதிர்க்கவில்லை என்றும், மாறாக சமூக நலத்திட்டங்கள் என்கிற பெயரில் அனைத்தையும் இலவசமாக வழங்குவது ஏற்கத்தக்க அல்ல என்றும், அது சமூக நலனுக்கான திட்டம்அல்ல என்றும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாரங்களையும் கேட்ட தலைமை நீதிபதி, மாநில அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளிப்பதை தடுக்க முடியாது என்கிற பரிந்துரை தான் அதிகமாக கிடைத்துள்ளது என்று கூறினார் .அதே நேரத்தில் இலவசங்கள் எது என்பது தொடர்பாக வரையறுக்க வேண்டும் எனவும், மருத்துவ காப்பீடு, குடிநீர் இணைப்பு, நுகர்வோர் மின்னணு பொருட்கள் வழங்குவது ஆகியவற்றை இலவசம் என வகைப்படுத்த முடியுமா…என்றும் கேள்வி எழுப்பினார்.அதே வேளையில் MNREGA திட்டம் மக்களின் வாழ்வை மேம்படுத்தும் திட்டங்கள் எனவும், கண்ணியமாக வாழ வழி வகுத்துள்ள திட்டம் ஆகும் என்றும் நீதிபதிகுறிப்பிட்டார்.

ஆட்சியில் இல்லாத அரசியல் கட்சிகள் கூட தேர்தல் இலவசங்களை அறிவிப்பதால், இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரின் கருத்தை அறிந்து விவாதித்த பின்னரே முடிவெடுக்க முடியும் என்றும் தெரிவித்தனர். இந்த வழக்கின் மனுவைஅரசியல் கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட நீதிபதி, அனைத்துதரப்பினரும் தங்களது பரிந்துரைகளை வரும் சனிக்கிழமைக்குள்உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தவிட்டனர்.மத்திய அரசின் சொலிசிட்டரிடமும்இதே போன்ற ஒரு நகலை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட தலைமை நிதிபதி என்.வி.ரமணா, வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 22ம் தேதி ஒத்திவைத்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.