காற்றாலை மின் திட்டங்களுக்கு தற்காலிக அனுமதி

இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூனேரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிற்கு அதானி பசுமை சக்திக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேசேகர கூறியுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க வளங்கள் மூலமான திட்டங்கள் தொடர்பான முன்னேற்றம் குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை (16) இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளை மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் சந்தித்து கலந்துரையாடிய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மின்சார சபை சட்டத் திருத்தங்கள் காரணமாக தாமதமான 46 திட்டங்களில் 21 திட்டங்களுக்கு அடுத்த வாரம் கைச்சாத்திடப்படும் எனவும் மற்ற திட்டங்கள் 30 நாட்களுக்குள் மதிப்பீடு செய்யப்பட உள்ளதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.