மார்பு விலா எலும்புகளில் முறிவு ஏற்படும் அளவுக்கு இறுக்கமாக கட்டி அணைத்ததாக வழக்கு.. நபருக்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம்..!

மார்பு விலா எலும்புகளில் முறிவு ஏற்படும் அளவிற்கு சக பெண் ஊழியரை இறுக்கமாக கட்டி அணைத்த குற்றத்திற்காக சீனாவை சேர்ந்த ஒரு நபருக்கு சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண் கடந்த ஆண்டு தன்னுடன் பணிபுரிந்து வந்த ஆண் நண்பர் ஒருவர் திடீரென தன்னை விலா எலும்புகள் நோக இறுக்கி அணைத்ததாகவும் இதனால் தனது மார்பில் 3 விலா எலும்புகளில் முறிவு ஏற்பட்டதாகவும் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனால் தனக்கு மருத்துவ செலவு ஏற்பட்டதுடன், விடுப்பு எடுத்ததால் சம்பளமும் கிடைக்காமல் போனதாகவும் அந்த பெண் கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த யூன்ஷி மாகாண நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நபருக்கு 1500 டாலர் அபராதம் விதித்து அதனை அந்த பெண்ணுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.