இருக்கையின் நுனிக்கு வந்த ஸ்டாலின்; அதிர்ச்சி தகவல் கூறும் அண்ணாமலை!

தமிழ்நாட்டில் திமுக அரசு பதவி ஏற்றது முதல் பல்வேறு வழிகளில் பாஜக குடைச்சல் கொடுத்து வருகிறது. முதல்வர்

, அமைச்சர் சேகர்பாபு, செந்தில் பாலாஜி என பலரின் மீதும் மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.

மேலும், திமுக அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சனம் செய்யும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விரைவில் திமுக அரசு கவிழ்ந்து விடும், என்பது போன்ற மிரட்டல் அம்புகளையும் எய்துவதை வழக்கமாக கொண்டு வருகிறார்.

இதனால் தமிழக அரசியலில் பாஜகவுக்கும், திமுகவுக்கும் நேரடி மோதல் உருவெடுத்தது. அதே சமயம் திமுகவும் எவ்வித தயக்கமும் இல்லாமல் பாஜகவுக்கு பதிலடி கொடுத்து வருகிறது.

இந்த சூழலில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை தொடக்கி வைப்பதற்காக பிரதமர் மோடி சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியுடன் நெருக்கமாக உரையாடினார்.

இதை வைத்து பாஜகவுடன் இணக்கமாக செல்ல திமுக முடிவு செய்து விட்டதாக தகவல்கள் கசிந்தன. இந்த நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மணி விழா கடந்த 16ம் தேதி அன்று நடந்தது.

இந்த கூட்டத்தில், பாஜகவுடன் குறைந்தபட்ச சமரசத்தையும் திமுக வைத்துக்கொள்ள கூடாது என, முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.

அதே கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது‘பாஜகவுடன் எந்த தருணத்திலும் திமுக குறைந்தபட்ச சமரசத்தையும் வைத்துக்கொள்ளாது’ என்ற உறுதியை திருமாவளவனுக்கு அன்பு பரிசாக வழங்குவதாக கூறினார்.

மேலும், அந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘நான் டெல்லிக்கு செல்கிறேன். காவடி தூக்கவா செல்கிறேன்? கை கட்டி, வாய்.. பொத்தி.. உத்தரவு கேட்கவா போகிறேன்? கலைஞர் பிள்ளை நான்’ என ஆவேசமாக பேசி இருந்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த பேச்சு தமிழகத்தில் பெரும் வரவரவேற்பை பெற்றது. மேலும், சமூக வலைதளவாசிகளும் இதை வைரலாக பரவ விட்டு, பாஜகவை பங்கம் செய்து வந்தனர்.

இந்நிலையில் பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் டெல்லியில் சந்தித்து நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை, காவிரி பிரச்சனை, மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்த கோரிக்கைகளை மனுவாக வழங்கினார்.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த சந்திப்பின்போது பிரதமர் என்கிற முறையில் நரேந்திர மோடி முன்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கை நுனியில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த சந்திப்பு தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேலி, கிண்டல் செய்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, ‘டெல்லிக்கு செல்வது குனிந்து கும்பிட அல்ல என வீர வசனம் பேசிய தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்தபோது அவர் முன் இருக்கையின் நுனியில் தான் அமர்ந்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலின் இன்னும் கொஞ்சம் வெளியில் வந்திருந்தாலும் விழுந்து விடுவார். பிரதமர் முன்பாக கீழே விழுந்திருந்தால் நமக்கு அசிங்கம். அவ்வளவு ஓரத்தில் உட்கார்ந்திருந்தார். என்ன பயமோ? தெரியவில்லை’ என வேற லெவலுக்கு இறங்கி நக்கல் அடித்து இருப்பது, தமிழக அரசியலில் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.