அமெரிக்காவில் காந்தி சிலை சேதம்| Dinamalar

நியூயார்க்:அமெரிக்காவில் கோவில் வாசலில் இருந்த காந்தி சிலையை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஹிந்து கோவில் வாசலில், மஹாத்மா காந்தி சிலை நிறுவப்பட்டுள்ளது.கைவினைக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட இந்த சிலையை மர்ம நபர்கள் சிலர் சமீபத்தில் சேதப்படுத்தினர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் அளித்த புகார்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், காந்தி சிலையை சுத்தியலால் உடைத்த மர்மநபர்களை தேடி வருகின்றனர்.கடந்த ஆண்டு டிசம்பரில் வாஷிங்டன், இந்த ஆண்டு பிப்ரவரியில் மன்ஹாட்டன் ஆகிய இடங்களிலும் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.