சித்தராமையாவுக்கு கொலை மிரட்டல்: 16 பேர் கைது| Dinamalar

பெங்களூரு: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையாவிற்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.வீர்சவார்கர் தொடர்பாக கருத்து தெரிவித்ததற்காக தனக்கு கொலை மிரட்டல் வருவதாக சித்தராமையா புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தும்படி போலீசாருக்கு முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டார். இதனடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குஷால்நகரில் 9 பேரும், மடிகேரியில் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.