திருப்பதியில் பசவராஜ் பொம்மை சுவாமி தரிசனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நேற்று காலை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோர் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

அவர்களை தேவஸ்தான அறங்காவலர் ஒய்.வி.சுப்பா ரெட்டி வரவேற்றார். இருவரும் சுவாமி தரிசனம் செய்த பின்னர் அவர்களுக்கு, ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவிக் கப்பட்டது.

இதனை தொடர்ந்து, திருமலையில், கர்நாடக மாநில அரசு சார்பில் ரூ.200 கோடி செலவில் கட்டப்பட்டு வரும், சத்திரத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை, கர்நாடக மாநில இந்து சமய அறநிலைத் துறை ஆணையர் ரோஷினி சிந்தூரி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.