காாில் கேர்ள் ஃபிரண்டுடன் பாஜக பிரமுகர்… மனைவி செய்த தரமான சம்பவம்!

குஜராத் மாநிலத்தில் 2002 இல் நிகழ்த்த மத கலவரத்தின்போது பில்கிஸ் பானு என்ற இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த கொடூர சம்பவத்தில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த 11 பேரை, சிறையில் நன்நடத்தையாக நடந்து கொண்டதன் அடிப்படையில் விடுதலை செய்வதாக குஜராத் மாநில அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

விடுதலை செய்யப்பட்டுள்ள 11 பேரின் ஜாதியை குறிப்பிட்டு, ‘அவங்க ரொம்ப நல்லவங்க… சிறையில் நன்

னடத்தையுடன் இருந்தனர்’ என்று நற்சான்றிதழ் அளித்திருந்தார் குஜராத்தை ஆளும் பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ராவுல்ஜி. அவரது இந்த கருத்தால் எழுந்த சர்ச்சை அடங்குவதற்குள் மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர்.

மோஹித் சங்கர் எனும் அவர், புன்டல்கந்த் பகுதியின் பாஜக மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவர் அண்மையில் தமது பெண் நண்பருடன் (Girl Friend) காரில் உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது.

இந்த விஷயத்தை அறிந்த அவரது மனைவி, தமது தாய், சகோதரர்கள் சகிதம் சென்று பெண் நண்பருடன் இருந்த தமது கணவர் இருந்த காரை சுற்றி வளைத்துள்ளார். மனைவியை கண்டதும் கையும் ஓடாமல், காலும் ஓடாமல் திகைத்து காரிலேயே அமர்ந்திருந்த மோஹித் சங்கரை காரில் இருந்து கீழே இறக்கிய அவரது மனைவி ஆத்திரத்தில் தான் அணிந்த செருப்பை கழற்றி அடித்துள்ளார். இதேபோன்று அவருடன் இருந்த பெண்ணையும் அவரது கணவர் செமையாக கவனித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ஜுஹி நகர போலீசார், அனைவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது மோஹித் சங்கர், அவரது மனைவி, மோஹித் சங்கரின் கேர்ள் பிரண்டின் கணவர் ஆகியோர் தனித்தனியாக போலீசில் புகார் அளி்த்தனர். இந்த புகார்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவ்ர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

மனைவி கையால் செருப்படி வாங்கும் பாஜக பிரமுகரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.