அரசியல் களத்திற்கு வருகிறாரா ஜூனியர் என்டிஆர்?.. உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஜூனியர் என்டிஆர் சந்திப்பு

டெல்லி: ஜூனியர் என்டிஆர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியது தெலுங்கானா அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் முனுகோட் தொகுதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.ராஜினாமா செய்த நிலையில் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரைக்காக சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஐதராபாத்தில் ஜூனியர் என்டிஆர் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் இணைந்து இரவு உணவு அருந்தினர். 20 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பு இருந்ததாக ஜூனியர் என்டிஆர் தெலுங்கு சினிமாவின் ரத்தினம் என்றும் அமித்ஷா பாராட்டினார்.

முன்னதாக ராஜமவுலி பிலிம் சிட்டிக்கு சென்ற அமித்ஷா, அதன் நிறுவனர் ராஜமவுலி ராவை சந்தித்தார். தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ், மத்திய அரசின் செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் அமைச்சர் ஜூனியர் என்டிஆரின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஜூனியர் என்டிஆர் அரசியலில் இறங்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.