திருட்டு முயற்சியில் ஈடுபட்ட 13 வயது சிறுவன்

பண்டாரகம, நாமலுவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் பணத்தை திருட முற்பட்ட 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கடை உரிமையாளர் அவரைத் தடுக்க முயற்சி செய்த போது சிறுவன் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி, கடையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மறைந்திருந்த நிலையில் பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர் .

33 வயதான கடை உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான குறித்த சிறுவன் இதற்கு முன்னர் பல தடவைகள் கடைக்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.