75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி

2022 ஓகஸ்ட்23ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு

2022ஓகஸ்ட்22ஆம் திகதிநண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.

நாட்டின் மேல், சப்ரகமுவமற்றும்வடமேல்மாகாணங்களிலும்குருநாகல், கண்டி, நுவரெலியா,காலிமற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் அவ்வப்போதுமழை பெய்யும்என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல்மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் சிலஇடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவுபலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவாமாகாணத்திலும் அம்பாறை மற்றும்மட்டக்களப்புமாவட்டங்களிலும் சிலஇடங்களில்மாலையில்அல்லதுஇரவில்மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோபெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது.

மத்தியமலை நாட்டின்மேற்கு சரிவுப்பகுதிகளிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரைஅதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையானமுன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.