ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், “ஜம்மு காஷ்மீரை சேராத மற்ற மாநில மாணவர்கள், தொழிலாளர்கள் உள்பட 25 லட்சம் பேரை புதிய வாக்காளர்களாக சேர்க்கலாம்” என்று ஜம்மு காஷ்மீர் தலைமைத் தேர்தல் அதிகாரி ஹிர்தேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ள தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்துக்கு எதிராக புதிய வியூகத்தை பாஜக கையாளவுள்ளது. இதுதொடர்பாக பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது.