கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபிக்கின் சேவைக்கு பாராட்டு

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார மீளாய்வு கலந்துரையாடல் மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

நேற்று முன் தினம் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது ,கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளராக இடம்மாற்றம் பெற்று செல்லும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஏ.ஆர்.எம்.தௌபிக் ஆற்றிய சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.புதிய மாகாணப் பளிப்பாளராக பதவியேற்கவுள்ள வைத்தியகலாநிதி கோஸ்டா  வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ.சுகுணன் தலைமையில், பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பிரதான மண்டபத்தில்  இந்த மீளாய்வு கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.