கள்ளக் காதலியின் 8 வயது மகளை பலாத்காரம் செய்து கொன்றவர் கைது| Dinamalar

புதுடில்லி : புதுடில்லியில், 8 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கசாப்பு கடைக்காரரை, போலீசார் கைது செய்தனர்.புதுடில்லியில் கணவர் மற்றும் நான்கு குழந்தைகளுடன் வசிக்கும் பெண்ணுக்கு, அதே பகுதியில் கசாப்புக்கடை நடத்துபவருடன் தொடர்பு ஏற்பட்டது.

ஒருநாள் இருவரும் நெருக்கமாக இருந்தபோது, அந்தப் பெண்ணின் 8 வயது மகள் பார்த்து விட்டாள். இதனால் இருவரும் பயத்துடனேயே இருந்தனர். இந்நிலையில், ஆக., ௪ம் தேதி இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த அந்தச் சிறுமியை காணவில்லை. போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரித்தனர். அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆக., 18ல் அந்த சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டு இருப்பது மருத்துவப் பரிசோதனையில் தெரியவந்தது.

இந்நிலையில், அதே பகுதியில் கசாப்பு கடை நடத்தும் ரிஸ்வான் என்பவரை, தனிப்படை போலீசார் கைது செய்து விசாரித்தனர். குழந்தையின் தாயுடன் தான் வைத்திருந்த கள்ளத் தொடர்பை பார்த்து விட்டதால், சிறுமியை துாக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். இந்த சம்பவம் புதுடில்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.