17 வயதிற்கு உட்பட்ட 2022 மகளிர் உலக வெற்றிக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி

17 வயதிற்கு உட்பட்டோருக்கான 2022 பெண்கள் உலக வெற்றிககிண்ண கால்பந்து போட்டிகள் இந்தியாவில் நடைபெறவுள்ளன.

போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30 ஆம் திகதி வரை மும்பை கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளதாக இந்திய ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

பதவி காலம் முடிந்த பின்னரும், புதிய தலைவருக்கான தேர்தலை நடத்தாமல் காலம்தாழ்த்தி வந்ததால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ப்ரபுல் படேலை உச்ச நீதிமன்றம் நீக்கியது. அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் முழுமையாக கலைத்தது.

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த உச்ச நீதிமன்றம் புதிதாக தேர்தலை நடத்து ஏதுவாக 3 பேர் கொண்ட அமைக்கப்பட்டது தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த குழு இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ அமைப்பாக செயல்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தது.

இந்த குழு தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனிடையே, இந்திய கால்பந்து கூட்டமைப்பில் மூன்றாம் தரப்பு தலையீடு இருப்பதாக கூறி அதன் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா நீக்கியது. மேலும், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கிண்ண கால்பந்து போட்டியை இந்தியா நடத்துவதற்கான உரிமத்தையும் பிபா தற்காலிகமாக நீக்கியதாக ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.