முதுகலை சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்! அம்பேத்கர் பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் முதுகலை சட்டப்படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி,  சட்டப்பள்ளியில் LLM சேர வரும் 5-ம் தேதி முதல்  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் உள்ள அரசு டாக்டர் அம்பேர்கர் சட்ட பல்கலைக்கழகத்தி கடந்த ஜூலை மாமே  ஐந்தாண்டு சட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம் தொடங்கி, மாணவர்கள் சேர்க்கையும் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், தற்போது முதுகலை சட்டப்படிக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறத.

இதுகுறித்து தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் மிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் சீர்மிகு சட்டப்பள்ளியிலும் பயிற்றுவிக்கப்படும் முதுகட்ட சட்டபடிப்பான LLM படிக்க,  வரும் 5-ம் தேதி முதல் 19-ம் தேதிக்குள்  இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, சட்டம் படிக்க விரும்பும் மாணவர்கள், http://tndalu.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் பதிவாளர் டாக்டர் ரஞ்சித் அறிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.