படிப்பு போட்டியால் சக மாணவியின் தாயால் விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் உயிரிழப்பு

காரைக்கால்: காரைக்காலில் 8-ம் வகுப்பு படிக்கும் தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுப்பதை பொறுத்துக்கொள்ள முடியாத தாய் ஒருவர், சக மாணவனுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விஷம் கொடுக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்த மாணவியின் தாய் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.