கத்திக்குத்து கொலையாளி உடல் மீட்பு| Dinamalar

வெல்டன்:கனடாவில் தொடர் கத்திக் குத்து சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகப்படும் இருவரில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் சாஸ்கத்செவான் மாகாணத்தில், நேற்று முன்தினம் வெவ்வேறு இடங்களில், கத்திக்குத்து சம்பவங்கள் நடந்தன. இதில், 10 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.இந்த சம்பவத்தில், டேமியன் சேன்டர்சன், 31, அவருடைய சகோதரர் மைல்ஸ் சேன்டர்சன், 30, ஈடுபட்டதாக போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
இந்நிலையில், கத்திக் குத்து சம்பவம் நடந்த ஒரு இடத்துக்கு அருகே, புதரில் இருந்து டேமியன் சேன்டர்சனின் உடல் நேற்று மீட்கப்பட்டது. அவருடைய உடலில் பல காயங்கள் இருந்தன. யாரோ அவரை தாக்கியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இதற்கிடையே தலைமறைவாக உள்ள மைல்ஸ் சேன்டர்சனை போலீசார் தேடி வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.