அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

சிரேஷ்ட ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன (Dinith Chinthaka Karunaratne) அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இன்று (8) அரசாங்க தகவல் திணைக்களத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஸ பெல்பிட மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னணி பத்திரிக்கை ஆசிரிய  பீடத்தின் அங்கத்தவராகவும் பணியாற்றியதோடு, ஜனாதிபதியின் ஊடக ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.