இந்தியாவில் கொரோனா தொற்றாளர்களுக்கு மூக்கு வழி தடுப்பு மருந்து

கொரோனா தொற்றாளர்களுக்கு பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்துக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக ஐதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது.

இந்த தடுப்பு மருந்து சுமார் 4 ஆயிரம் தன்னார்வலர்களுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. அதில் பக்க விளைவுகளோ, விரும்பத்தகாத பிற விளைவுகளோ ஏற்படவில்லை. இந்த தடுப்பு மருந்து 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இந்த தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதைப் பரிசீலித்து இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளர், இந்த மூக்கு வழி தடுப்பு மருந்துக்கு தனது அனுமதியை வழங்கியுள்ளார்.

இதை இந்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்த தடுப்பு மருந்து, ‘கொரோனாவுக்கு எதிரான கூட்டு போராட்டத்தை மேலும் வலுப்படுத்தும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.