உக்ரைனில் இருந்து வெளியேறிய மருத்துவ மாணவர்களை இந்தியாவிலேயே கல்வியை தொடர அனுமதிக்கும் வகையில் உரிய விதிமுறைகளை உருவாக்க கோரி தொடரப்பட்ட புதிய மனுக்களை ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் காரணமாக உக்ரைன் நாட்டில் படித்து வந்த 20 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் அங்கிருந்து வெளியேறி நாடு திரும்பினர். போர் இன்னும் நிறைவடையாத சூழலில் அவர்கள் தங்களது படிப்பினை தொடர முடியாத நிலை சூழல் நிலவு வருகிறது. இதையடுத்து இந்தியாவிலேயே அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில் தங்களது படிப்பினை தொடர வழி செய்யும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்க வேண்டும் என கோரி தாக்கல் செய்த ஏராளமான மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் மேலும் சில மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டு அவை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ஏற்கனவே நிலுவையில உள்ள வழக்குகள் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் அன்றைய தினமே இந்த வழக்குகளும் சேர்த்து விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது மேலும் இந்த மனுக்கள் மீதும் எதிர்மனுதாரர்கள் பதிலளிக்க நோட்டீஸும் பிறபிக்கப்பட்டது.
இதையும் படிக்க: கைப்பற்றப்பட்ட உக்ரைன் பகுதிகளை இணைத்துக்கொள்ள ரஷ்யா திட்டம் – நவம்பரில் தீர்மானம்?Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM