சட்டவிரோத கடன் செயலிகளை பிலே ஸ்டோரில் இருந்து நீக்க ரிசர்வ் வங்கி, மத்திய அரசு ஒருங்கிணைந்து நடவடிக்கை

டெல்லி: தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்ட விரோத  கடன் செயலிகளை இயக்குபவர்களின் மிரட்டல் காரணமாக பல தற்கொலை நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் இத்தகைய  செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்டுகிறது. அதன் அடிப்படையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கியை  சேர்ந்த மூத்த அதிகாரிகள் மற்றும் பல்வேறு மத்திய அரசு துறைகளை சேர்த்த அதிகாரிகள் பங்குபெற்றனர்.

அந்த கூட்டத்தின் இறுதியில் சட்டவிரோத கடன் செயலிகளை தடை செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் படி ரிசர்வ் வங்கியால் அனுமதிக்கப்படும் கடன் செயலிகள் மட்டுமே இனி ஆப் ஸ்டோரில் இடம் பெற அனுமதிக்கப்படும். இதற்கான நடவடிக்கையை மத்திய தகவல் தொடர்பு துறை அமைச்சகம் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போலவே ரிசர்வ் வங்கி, இத்தகைய கடன் செயலிகளை இயக்குபவர்கள் பயன்படுத்தும் பினாமி வாங்கி கணக்குகளை முடக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் விவகார அமைச்சகம் இத்தகைய செயல்களுக்கு பின்னல் இருப்பவர்கள் பயன்படுத்தும் போலி நிறுவனங்களை தடை செய்யவும் நடவடிக்கை எடுப்பார்கள். அனைத்து வகைகளிலும் இத்தகைய கடன் செயலிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முடிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை மத்திய நிதியமைச்சகம் தொடர்ந்து கண்காணிக்கும் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கடன் செயலிகளை இயக்குபவர்கள் கடன் பெறுபவர்களின் கை பேசியில் இருந்து விவரங்களை எடுத்துக்கொண்டு அதன் மூலம் கடன் பெற்றவர்களை மிரட்டுவது, ஆபாச புகைப்படங்களை வெளியிடுவோம் என மிரட்டுவதால் தான் பலர் தற்கொலை செய்துகொள்கின்றார். இத்தகைய செயலிகளுக்கு பின்னல் சீனா நாட்டை சேர்ந்தவர்கள் இருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த கடன் செயலி நிறுவனங்கள் கருப்பு பணம், வரிஏய்ப்பு, சட்டவிரோத கடன் அழிப்பு போன்ற பல்வேறு குற்றங்களில் ஈடுபடுவதால் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி ஒருங்கிணைந்து இத்தகைய செயலிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.