தேர்வுகள் நடைபெறும் பகுதிகளில் முறைகேடுகளை தடுக்க இணையதள வசதிகளை தற்காலிகமாக தடை செய்யும் அரசுகளின் முடிவிற்கு எதிரான மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக தனியார் அமைப்பு ஒன்று தொடர்ந்து வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றங்களில் ஏன் தாக்கல் செய்யக்கூடாது என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். ஒவ்வொரு அரசும் ஒவ்வொரு நிலைப்பாட்டில் இருப்பதால் உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தை விசாரிக்க வேண்டும் என மனுதாரர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இதனை அடுத்து மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் பதிலளிக்குமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதி நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டார். தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளை தடுக்க தொழில்நுட்ப ரீதியிலான ஏதேனும் நெறிமுறைகள் உள்ளதா என்பதையும் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது
இதையும் படிக்க: ‘தலைமை ஆசிரியர்களும் மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும்’ – புதுச்சேரி கல்வித்துறை உத்தரவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM