பா.ஜ.க ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காகவே இந்த பயணம் ..! – 3வது நாள் பயணத்தில் ராகுல் காந்தி பேச்சு..!

இந்திய

கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும்,

தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை `பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

கன்னியாகுமரியில் பாதயாத்திரை தொடங்கிய , ராகுல் காந்தி 12 மாநிலங்கள் 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 150 நாட்கள் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார். காங்கிரஸ் கட்சியின் ‘இந்திய ஒற்றுமை பயணம்’ பல்வேறு தமிழக அரசியல் தலைவர்கள் முன்னிலையில் துவங்கியது. ராகுல் காந்தியின் நடை பயணத்தில் அவருடன் பல்வேறு அரசியல் தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் அவருடன் நடை பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

இன்று 3வது நாள் நடை பயணமாக நாகர்கோவிலில் இருந்து தக்கலை நோக்கி 18 கிலோ மீட்டர் பயணம் மேற்கொள்கிறார்.இதற்கிடையில் செய்தியாளர்களைச் சந்தித்த ராகுல் காந்தி,” காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் என்ற முறையில் நாட்டின் ஒற்றுமைக்காக இந்த நடை பயணத்தில் பங்கேற்பது எனது கடமை. நடை பயணத்தில் நான் பங்கேற்பதில் முரண்பாடு எதுவும் இல்லை.

பா.ஜ.க ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துச் செல்வதற்காகவே இந்த பயணம் மேற்கொண்டுள்ளேன். சிபிஐ, வருமானவரித்துறை அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளில் ஒன்றிய பா.ஜ.க அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்தியா என்ற பன்முகத்தன்மை வாய்ந்த கட்டமைப்பை மாற்ற வேண்டும் என்பதே பா.ஜ.க அரசின் குறிக்கோள். பா.ஜ.கவின் இத்தகைய செயல்பாடுகளை ஒரு சிலர் எளிதாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் என்னால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த நடை பயணத்தில் குழந்தைகளிடம் நான் உரையாற்றியபோது அவர்கள் கூறிய ஒன்றால் நான் கவரப்பட்டேன். அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழ்வதே இந்தியா என்று குழந்தைகள் கூறினர். ஆனால் தற்போது நாட்டில் நல்லிணக்கம் என்பதே இல்லை.

எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைய வேண்டும் என்பதே காலத்தின் கட்டாயம். இதற்கான பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, அனைத்துக் கட்சிகளுக்கும் உள்ளது. தமிழ் அழகான மொழி. நான் நிச்சயம் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.