உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு அதிர்ச்சி!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதனால், உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கானோர் வெளியேறி வருகின்றனர். உக்ரைனில் இருந்து 5 லட்சம் பேருக்கும் மேற்பட்டோர் வெளியேறியுள்ளதாக ஐ.நா., சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது. ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் உக்ரைனில் சிக்கியிருந்த சுமார் 20,000க்கும் மேற்பட்ட மாணவர்களை மத்திய அரசு மீட்டுள்ளது.

உக்ரைனில் போர் இன்னும் முடியாத காரணத்தால் இந்திய மாணவர்களால் படிப்பை தொடர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தியாவிலேயே அரசு அல்லது தனியார் கல்வி நிறுவனங்களில் தங்களது படிப்பை தொடர வழிவகை செய்யும் வகையில் புதிய விதிமுறைகளை உருவாக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணைன நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய இந்திய மாணவர்களுக்கு இந்திய பல்கலைக்கழகங்களில் படிப்பினை தொடர ஏற்பாடுகளை செய்து தர முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல் தெரிவித்துள்ளது. தளர்வுகளை செய்து கொடுத்தால் அது இந்தியாவில் மருத்துவ படிப்பின் தரத்தினை பாதிக்கும் எனவும் மத்திய அரசு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த தகவல் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.