பாக்., சிறுமி கர்ப்பம்: சீன நாட்டவர் கைது| Dinamalar

இஸ்லாமாபாத்:பாகிஸ்தானில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சீன நாட்டவர் மீது அந்நாட்டு போலீசார் வழக்குப் பதிந்து, அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து அந்நாட்டின் பத்திரிகை ஒன்று வெளியிட்ட செய்தி:பாகிஸ்தானைச் சேர்ந்த ௧௬ வயது சிறுமி சீனரிடம் மொழி பெயர்ப்பாளராக வேலைக்குச் சேர்ந்தார். அப்போது முதல் அவர் அச்சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டி வந்துள்ளார். கடந்த ஜனவரியில் அச்சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சீனர் அதன்பின் தொடர்ந்து பாலியல் உறவு கொண்டுள்ளார்.

இதை வெளியே சொன்னால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டியுள்ளார். பலாத்காரத்தால் கர்ப்பமடைந்த அச்சிறுமி இதை தன் வீட்டில் தெரிவிக்காமல் மறைத்து வந்துள்ளார். ஆனால் சந்தேகமடைந்த சிறுமியின் சகோதரி, அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு பரிசோதித்த டாக்டர் சிறுமி கர்ப்பமடைந்து32வாரமாகிறது என கூறியுள்ளார்.இது குறித்து, சிறுமியின் பெற்றோர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தனர். விசாரணையில், குற்றத்தை ஒப்புக்கொண்ட சீனர் தான் அச்சிறுமியிடம் உறவு வைத்திருந்ததாகவும், பலாத்காரம் செய்யவில்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், அவரது பாஸ்போர்ட்டையும் பறிமுதல் செய்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.