நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பேருந்து – 27 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்!

சீனாவில் நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான சம்பவத்தில், 27 பேர் உயிரிழந்து உள்ளனர்.

தென் மேற்கு சீனாவின் மலைப் பகுதியான குய்சோவு மாகாணத்தில், இன்று அதிகாலை, 47 பேருடன் பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்தப் பேருந்து, மாகாண தலைநகரான குயாங்கிற்கு தென் கிழக்கே 170 கிலோ மீட்டர் (105 மைல்) தொலைவில் உள்ள சாண்டு கவுண்டி என்ற இடத்திற்கு வந்த போது, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலையில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

பிரிட்டன் ராணி இறுதிச்சடங்கு: லண்டன் வந்தார் அமெரிக்க அதிபர் பைடன்!

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.