ஜப்பானை மிரட்டும் நான்மடோல் புயல்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

டோக்கியோ : ஜப்பானில் சக்தி வாய்ந்த புயல் கரையை கடப்பதால் கடலோரத்தில் வசித்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.கிழக்காசிய நாடான ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கியூஷூ தீவில் உள்ள ககோஷிமா நகரை நேற்று சக்தி வாய்ந்த ‘நான்மடோல்’ புயல் கரையை கடந்து, வடக்கு நோக்கி நகர்வதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

latest tamil news

இதனால், மணிக்கு 162 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும், இந்தப் புயல் டோக்கியோ நகரில் நாளை கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.எனவே, கடலோரப் பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். பல நகரங்களில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.