நொய்டாவில் சுவர் இடிந்து 4 பேர் பரிதாப பலி

நொய்டா:  உத்தரப் பிரதேசத்தின் நொய்டாவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக பலியானார்கள். உத்தரப் பிரதேச மாநிலம், நொய்டாவில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பின் அருகே கால்வாய் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த பணியின்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த சுவர் இடிந்து விழுந்தது. இதில் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

ஜேசிபி இயந்திரங்கள் மூலம் கட்டிட இடிபாடுகளை அகற்றப்பட்டன. 12 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், 4 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 8 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுவர் இடிந்து உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.