உயர்தரம் ,புலமைப்பரிசில் பரீட்சைகளின் திகதிகளில் மாற்றம் இல்லை 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை டிசம்பர் 4 ஆம் திகதியும், க.பொ.த உயர்தரப் பரீட்சையை டிசம்பர் 5 ஆம் திகதி முதல் ஜனவரி 2 ஆம் திகதி வரை நடாத்துவதற்கும் பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இவ்விரு பரீட்சைகளும் பிற்போடப்பட்டால், பாடசாலை அட்டவணைக்கமைய  பாடசாலை நடத்தப்படும் திகதிகளையும் மாற்ற வேண்டிய நிலை ஏற்படும். அத்துடன், க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை உள்ளிட்ட பரீட்சைகளையும் பிற்போட வேண்டிய நிலை ஏற்படும்; என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவ்வாறு நடந்தால், இந்த ஆண்டு பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் மாத்திரமன்றி ஒட்டு மொத்த சந்ததியினரும் எதிர்கால உயர்கல்வி வாய்ப்புகளில் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே திட்டமிட்டபடி இந்த பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு தயாராகுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.