இந்தியாவில் ,தினசரி கொரோனா பாதிப்பு 5,443 ஆக உயர்வு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வந்தது. இருப்பினும் இன்று சற்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இன்று இந்த எண்ணிக்கை 5 ஆயிரத்து 443 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 45 இலட்சத்து 453 ஆயிரத்து 042 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று இந்தியா முழுவதும் 5 ஆயிரத்து 291 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீட்கப்பட்டனர். இதுவரை இந்த தொற்றில் இருந்து மீட்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 இலட்சத்து 78 ஆயிரத்து 271 ஆக அதிகரித்துள்ளது.

இருப்பினும் நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 46 ஆயிரத்து 216 லிருந்து 46 ஆயிரத்து 342 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை இந்தியா முழுவதும் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் இறந்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 28 ஆயிரத்து 429 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.