ஈரோடு: மில்லில் வேலை செய்து கொண்டிருந்த வாலிபர்.! மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்துள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்தவர் ராஜா(36). இவர் ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ராஜா வழக்கம்போல் வேலை செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்துள்ளார்.

இதையடுத்து சக பணியாளர்கள் உடனே ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் ராஜா மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கருங்கல்பாளையம் போலீசார், ராஜாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.