உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலக கிரிக்கெட் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிகளை லண்டனில் நடத்துவதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தின் சவுத்தம்டன் நகரில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடந்தது. இதில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றியடைந்தது.

இந்நிலையில் அடுத்த இரு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளையும் லண்டனில் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி.) பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெப் அலார்டிஸ்  (22)  தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 2023 ஆம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டம் லண்டன் ஓவலிலும், 2025 ஆம் ஆண்டு இறுதிப்போட்டி லண்டன் லோர்ட்சிலும் நடைபெறும்.

இதேவேளை 2 ஆவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில் தற்போது அவுஸ்திரேலியா 70 சதவீத புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 2ஆவது இடத்திலும், இலங்கை 3ஆவது இடத்திலும், இந்தியா 4 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 5 ஆவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.