கழிப்பறையை சுத்தம் செய்த அரசு பள்ளி மாணவியர்| Dinamalar

குணா, :மத்திய பிரதேசத்தில், அரசு பள்ளி கழிப்பறையை மாணவியர் சுத்தம் செய்யும் புகைப்படம் ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.ம.பி.,யின் குணா மாவட்டத்தின் சக்தேவ்பூர் கிராமத்தில் அரசு ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு, ஐந்தாம் மற்றும் ஆறாம் வகுப்பு மாணவியர் பள்ளி சீருடை அணிந்து கழிப்பறையை சுத்தம் செய்யும் புகைப்படம் உள்ளூர் பத்திரிகைகளில் சமீபத்தில் வெளியானது.

இது, சமூகவலைதளங்களிலும் வேகமாக பரவியது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி, காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு பஞ்சாயத்து துறை அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.மேலும், மாநில கல்வித்துறை அதிகாரிகள் பள்ளி வளாகத்தில் நேற்று நேரடியாக ஆய்வு நடத்தினர். தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வராத நாளில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் உறுதி அளித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.