பத்திரிகைகள் சங்க நிர்வாகிகள் தேர்வு| Dinamalar

புதுடில்லி :இந்திய பத்திரிகைகள் சங்க தலைவராக சாக்ஷி நாளிதழின் கே.ராஜ பிரசாத் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய பத்திரிகைகள் சங்க ஆண்டுக் கூட்டம் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக இன்று நடந்தது. இதில், 2022 – 2023ம் ஆண்டுகான நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.தலைவராக சாக்ஷி நாளிதழின் கே.ராஜ பிரசாத் ரெட்டி, துணைத் தலைவராக ஆஜ் சமாஜின் ராகேஷ் சர்மா, உதவி தலைவராக ‘மாத்ருபூமியின் எம்.வி.ஷ்ரேயம்ஸ் குமார், கவுரவ பொருளாளராக அமர் உஜாலாவின் தன்மய் மகேஸ்வரி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களாக தினமலர் நாளிதழின் டாக்டர் ஆர்.லட்சுமிபதி, ஹெல்த் அண்ட் ஆன்டிசெப்டிக் பத்திரிகையின் எல்.ஆதிமூலம், தினத்தந்தியின் எஸ்.பாலசுப்ரமணியம் ஆதித்தன், தினகரனின் ஆர்.எம்.ஆர். ரமேஷ், தி இந்தியன் எக்ஸ்பிரசின் விவேக் கோயங்கா, சாகல் நாளிதழின் பிரதாப் ஜி பவார் உட்பட 41 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.