காதலுக்கு மரியாதை!! கணவருக்கு முன்னாள் காதலியை திருமணம் செய்து வைத்த மனைவி!

ஆந்திராவில் மனைவி ஒருவர் தனது கணவருக்கு முன்னாள் காதலியுடன் 2வது திருமணம் செய்து வைத்துள்ள ஆச்சரிய சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரா மாநிலம் திருப்பதி மாவட்டத்தை சேர்ந்தவர் கல்யாண். இவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைதளம் மூலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்த விமலா என்ற பெண் பழக்கமானார். இதையடுத்து இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் 2 பேரும் டக்கிலி பகுதியில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.

image
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு விசாகப்பட்டினத்தை சேர்ந்த நித்யஸ்ரீ என்பவர் விமலாவை தனியாக சந்தித்துப் பேசி, ”உங்களுக்கு திருமணம் ஆவதற்கு முன் நானும் கல்யாணும் காதலித்து வந்தோம். ஆனால் சிறிய கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டோம்.  நான் அவரை தேடியும் என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கல்யாணை என்னால் மறக்கமுடியவில்லை. இதனால்தான் தேடி வந்தேன். எங்களை சேர்த்து வையுங்கள்” எனக்கூறி கண்கலங்கி உள்ளார்.

image
இதைக்கேட்ட விமலா அவரை சமாதானம் பேசி அனுப்பினார். இதையடுத்து விமலா ஒரு விநோத முடிவுக்கு வந்தார். அதன்படி தனது கணவரான கல்யாணுக்கு முன்னாள் காதலியான நித்யஸ்ரீயுடன் இரண்டாவது திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்கு நித்யஸ்ரீ, கல்யாண் இருவரும் ஒப்புக்கொண்டனர். இருவரின் திருமணம் திருப்பதியில் உள்ள ஒரு கோவிலில் விமலா முன்னிலையில் நடந்தது. திருமணத்திற்குப் பின் மூவரும் சேர்ந்து செல்போனில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இதையும் படிக்க: நடுரோட்டில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த வாகனம்.. சோதனை செய்த போது ஷாக் ஆன போலீசார்!Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.