காட்டுக்கு தீ வைத்த மாணவர்களுக்கு நீதவான் நீதிமன்றம்….

எல்ல பிரதேசத்தில் காட்டுப் பகுதிக்கு தீ வைத்து சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ,கைது செய்யப்பட்ட 16 பாடசாலை மாணவர்களுக்கு பண்டாரவளை நீதவான் நீதிமன்றம்  தண்டனை வழங்கியுள்ளது.

சந்தேக நபர்கள் ஒவ்வொருவரும் 1 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியது.

அதனையடுத்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை எல்ல பொலிஸாரால் தெரிவு செய்யப்பட்ட பிரதேசங்களில் ஒவ்வொருவரும் 10 மரக்கன்றுகளை நடும் படி மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

குறித்த சம்பவம் சனிக்கிழமை (24) எல்ல பிரதேசத்தில் உள்ள ஒதுக்கப்பட்ட காட்டு பகுதிக்கு தீ வைத்த குற்ற சாட்டில் 16 பாடசாலை மானவர்களை பிரதேசவாசிகள்  பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பதுளை மற்றும் பசறை பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.  குறித்த காட்டில் பிறந்தநாள் விழாவை கொண்டாடிய பின்னர் அவர்களால் காட்டுக்கு தீ வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.