கொரியா ஓபன் டென்னிஸ்: ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா 'சாம்பியன்'

சியோல்,

கொரியா ஓபன் பெண்கள் சர்வதேச டென்னிஸ் போட்டி சியோலில் நடந்து வந்தது.

இதில் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 24-வது இடம் வகிக்கும் ரஷியாவின் எகதேரினா அலெக்சாண்ட்ரோவா 7-6 (7-4), 6-0 என்ற நேர் செட்டில் முன்னாள் சாம்பியன் ஜெலினா ஆஸ்டாபென்கோவை (லாத்வியா) தோற்கடித்து பட்டத்தை வசப்படுத்தினார்.

தனது 3-வது சர்வதேச பட்டத்தை கையில் ஏந்திய 27 வயதான அலெக்சாண்ட்ரோவாவுக்கு ரூ.27 லட்சம் பரிசுத்தொகையாக கிடைத்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.