நேரடி ஒளிபரப்பு சேனல் : உச்ச நீதிமன்றம் உறுதி| Dinamalar

புதுடில்லி,:’வழக்குகள் விசாரணையை நேரடியாக ஒளிபரப்புவதற்கென சொந்தமாக ஒளிபரப்பு சேனல் விரைவில் துவக்கப்படும்’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உச்ச நீதிமன்றத்தில், அரசியல் சாசன அமர்வின் விசாரணைகளை நேரடியாக ஒளிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை, ‘யு டியூப்’ சேனல் வாயிலாக ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் ரவீந்திர பட், ஜே.பி. பர்திவாலா அமர்வில், பா.ஜ., முன்னாள் மூத்த தலைவர் கே.என்.கோவிந்தாசாரியாவின் வழக்கறிஞர் விராக் குப்தா நேற்று கூறியதாவது:

யு டியூப் சமூக வலைதள விதிமுறைகளின்படி, அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றின் காப்புரிமை அந்த நிறுவனத்துக்கு அளிக்கப்பட வேண்டும்.உச்ச நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணை தொடர்பான காப்புரிமையை அந்த நிறுவனத்துக்கு அளிப்பது பெரிய ஆபத்தாக அமைந்துவிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அமர்வு கூறியதாவது:தற்போது தான் நேரடி ஒளிபரப்பை துவக்கி உள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் காப்புரிமையை விட்டுத் தர மாட்டோம். நேரடி ஒளிபரப்புக்காக தனியாக சொந்தமாக ஒளிபரப்பு சேனல் விரைவில் துவக்கப்படும்.இவ்வாறு அமர்வு கூறியது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.