ஷின்சோ அபே இறுதிச்சடங்கு; நாளை ஜப்பான் செல்கிறார் பிரதமர் மோடி| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஜப்பான் முன்னாள் பிரதமரின் இறுதிச் சடங்கில் பங்கேற்க பிரதமர் மோடி நாளை (செப்.,27) ஜப்பான் செல்ல உள்ளார்.

ஜப்பான் முன்னாள் பிரதமரும், லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் மூத்த தலைவருமான ஷின்சோ அபே, கடந்த ஜூலை 8ம் தேதி அந்நாட்டின் நரா நகரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஜப்பானின் நீண்ட நாட்கள் பிரதமராக பணியாற்றியவர் என்ற பெருமை கொண்டவர் என்பதால் ஷின்சோ அபேவின் இறுதிச் சடங்கை மிக பிரமாண்டமான முறையில் நடத்த ஜப்பான அரசு திட்டமிட்டது.

latest tamil news

அதன்படி நாளை (செப்.,27) இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. இந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை ஜப்பான் பயணம் செய்கிறார். ஜப்பானின் தற்போதைய பிரதமரான பிமியோ கிஷிடாவை பிரதமர் மோடி தனியாக சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஒரு நாளுக்கும் குறைவாகவே ஜப்பானில் பிரதமர் மோடி இருக்க உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.