கொடூரத்தின் உச்சம்..!! டெல்லியில் மைனர் சிறுவன் ஒருவன் கூட்டுப் பலாத்காரம்..!!

இந்தியாவில் சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் அதிகமாக பதிவாகி வருகிறது. அதுவும் மைனர்களை குறி வைத்து நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

தலைநகர் டெல்லியில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், குறிப்பாக கூட்டு பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள் போதைப்பொருள் பயன்பாடு, உளவியல் பிரச்சினைகள் மற்றும் பாலியல் வறட்சி ஆகியவற்றால் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் டெல்லியில் மைனர் சிறுவன் ஒருவன் கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புது டெல்லி பகுதியில் 12 வயது சிறுவனை நான்கு பேர் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அத்துடன் நில்லாமல் அந்த சிறுவனை இரும்பு தடிகளைக் கொண்டு கொடூரமாகத் தாக்கி உள்ளனர். பின்னர் அப்படியே ரோட்டில் சாக விட்டு விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டெல்லி மகளிர் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லியில் ஒரு ஆண் குழந்தைக்கு கூட பாதுகாப்பு இல்லை” என தெரிவித்துள்ளார். மகளிர் ஆணையம் விசாரணையை மேற்கொண்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறையிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பெண்களை விடுங்கள்.. டெல்லியில் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை.. 12 வயது சிறுவனை 4 பேர் கொடூரமாக பலாத்காரம் செய்தனர்.. அதுமட்டுமின்றி அந்த சிறுவன் இரும்பு கம்பிகளால் தாக்கப்பட்டான். பாதி உயிரிழந்த நிலையில், ரோட்டிலேயே விடப்பட்டான். இந்தச் சம்பவம் குறித்து போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளோம்.

இதுவரை, இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீசாருக்கு மகளிர் குழு நோட்டீசும் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.