பணம் பறித்து வந்த நபரை கொலை செய்த சிறுவர்கள்

புதுடில்லி : டில்லியில் மது குடிப்பதற்காக மிரட்டி பணம் பறித்து வந்த நபரை கத்தியால் குத்தி கொலை செய்த மூன்று சிறுவர்களை போலீசார் நேற்று கைது செய்தனர்.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு சுல்தான்புரி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் ௩௦. இவர் தன் வீட்டு அருகேயுள்ள சிறுவர்களை அடித்து மது அருந்துவதற்காக அடிக்கடி பணம் பறித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுவர்கள் மூன்று பேர் சேர்ந்து நேற்று முன் தினம் அஜயை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் அஜய் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பக்கத்து வீட்டு சிறுவன் மற்றும் அவனது இரண்டு நண்பர்கள் அஜயை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. அஜய் இந்த சிறுவர்களை அடித்து மது குடிப்பதற்காக பணம் பறித்து வந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவர்களை கைது செய்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.