இருளில் மூழ்கிய புதுச்சேரி – மக்கள் போராட்டம்!!

புதுச்சேரி முழுவதும் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை ஊழியர்கள் இன்று 4 வது நாளாக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நகரம் மற்றும் கிராமப்புறம் முழுவதுமாக 2 மணி நேரத்திற்கும் மேலாக ஏற்பட்டள்ள மின்வெட்டு காரணமாக புதுச்சேரி இருளில் மூழ்கி உள்ளது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

மின் இணைப்பு வழங்குவது தொடர்பாக மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் சட்டமன்ற வளாகத்தில் தலைமை செயலர் ராஜீவ் வர்மா, காவல்துறை டிஜிபி மனோஜ் குமார் லால், மின்துறை செயலர் ஆகியோருடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

மின் வெட்டை கண்டித்து பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வரும் நிலையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை செயலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.