அக்டோபா் முதல் வாரத்தில் 2ம் தேதி காந்தி ஜயந்தி விடுமுறை, 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பலரும் சொந்த ஊர்களுக்கு செல்லதிட்டமிட்டுள்ளனர். அவர்களுக்கு பயனளிக்கும் வகையில், நேற்றும், இன்றும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் இருந்து, வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக, 2,050 சிறப்பு பேருந்துகளும், மற்ற ஊர்களில் இருந்து 1,650 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து மூன்று சிறப்பு பேருந்து நிலையங்கள் வாயிலாக வெளியூர் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அடிப்படையில் நேற்றைய தினம் சென்னையில் இருந்து 2,100 பேருந்துகளுடன் கூடதலாக 744 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இயக்கப்பட்ட இந்த பேருந்துகளில் நேற்று ஒரே நாளில் சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 200 பயணிகள் பயணம் செய்துள்ளனர் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு இயக்கப்படும் தினசரி 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 938 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.